வடமராட்சியில் 18 பேருக்கு கொரோணா தொற்று உறுதி…!

யாழ்.பருத்தித்துறை – கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 66 பேருக்கு நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்,

அவர்களில் 45 பேருக்கு தொற்றில்லை. 3 பேருக்கு மீள் பரிசோதனை செய்யவேண்டியிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews