மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பு..!

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹந்த ராஜபக்ஸ நேற்று நாடாளுமன்றிற்கு வருகை தந்து நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார. மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் நேற்றைய தினம் மீ்ண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் நேற்று மகிந்த நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews