களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைசெய்யப்பட்ட ஆத்மாக்களின் சாந்தி வேண்டி விசேட
பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பின் செயலாளர் சதீஷனின் ஒருங்கிணைப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் கே.வினோராஜ் மற்றும் வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில்
அமைப்பின் சிவா மற்றும் நிசான் ஆகியோரின் அனுசரணையுடன் ஆலயத்தில் அன்னதானமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews