அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பெற்றோல் விநியோகம்: நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டாம் என தெரிவிப்பு

பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பெற்றோலை தொடர்ச்சியாக விநியோகிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் போதியளவு டீசல் கிடைக்கப்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தேவையான டீசல், சுப்பர் டீசல் என்பவற்றை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் பெற்றோலை விநியோகிப்பதிலேயே சிக்கல் உள்ளது. ஒரு நாளைக்கு மட்டுமே பெற்றோல் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தனது விசேட உரையில் தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews