ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை. – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது. இன்று அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டடுள்ளதாவது.
ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயும், செம்மணிகளையும், செஞ்சோலைகளையும் ஒன்றாகச் சேர்த்து சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சி ஆடிய ஊழிக்கூத்தின் அழியா சாட்சியாக முள்ளிவாய்க்கால் இரத்த சரித்திரத்தின் 13வது ஆண்டை கடக்கும் நிலையில், ஈழத்தமிழர்களை இனவழிப்புச்செய்த ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கெதிராக சிங்கள மக்களே கிளர்ந்து எழுந்துள்ளனர். 13வது இனவழிப்பு நினைவேந்தல் நாளில் கொடுங்கோலர்களின் ஆட்சி அவர்களது சொந்த மக்களாலேயே அடித்துத் வீழ்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய காலத்திலிருந்து ஈழத்தமிழர்களை வஞ்சித்து செய்த இனவாத அரசியலின் விளைவே இன்றைய நிலைக்குக் காரணம். ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியான வாழ்வும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியும்; கிட்டாது என்பது நிதர்சனமான உண்மை.

கொன்று பிணமாகவும், உயிருடனும் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட 70.000ற்கு மேற்பட்ட எமது உறவுகளுக்கு கிடைக்கும் நீதியானது எமக்கானதாக மட்டுமன்றி அனைத்துலக மனிதநேயத்தின் மாண்பினை காப்பதாகவும் அமையும். ஏனென்றால், தமிழர் உடல்களுடன் அனைத்துலக மனிதநேயமும் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆழப்புதைக்கப்பட்டுள்ளது. விடுதலை வேட்கையுடன் மரித்துப்போன மண்ணுறங்கும் மாவீரர்கள் விடுதலையின் பால் கொண்ட பற்றுறுதியே இன்று சிங்களத்தை அல்லோலகல்லோலப் படுத்துகின்றது. தமிழர்களைத் துயிலுரிந்து மானபங்கப்படுத்தியவர்கள், இன்று தங்கள் சொந்த இனத்தாலேயே துயிலுரிந்து அடித்துக் கலைக்கப்படுகிறார்கள்.

இன்று வரை 146,679 பேருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமலே 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒருபக்கம் எமக்கான நீதி தடுத்து தாமதப்படுத்தப்பட்டு வருகையில் மறுபக்கம் வேறு வடிவிலான இனவழிப்பு செயற்பாடுகளும் சிங்கள அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2009ல் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னரும் வடக்குக் கிழக்கில் 300.000 இராணுவத்தினர் குடிகொண்டுள்ளனர். இராணுவத்தளபதியும் இனவழிப்பாளனுமான சவேந்திர சில்வா எந்தத் தயக்கமும் இல்லாமல் வடக்கில் அமைக்கப்படும் பௌத்த விகாரையைப் பார்வையிட வந்து செல்கிறான். சிங்கள மக்களை மூளைச்சலவை செய்து பௌத்த சிந்தனைவாதத்திற்குள்ளும் மகாவம்ச மாயைக்குள்ளும்; வைத்துக்கொண்டு தமிழரையும் முசுலீம்களையும் நசுக்கி இனவாத அரசியல் மேற்கொண்டு வருகிறது சிங்களம். இன்றைய எதிர்ப்புகள் ராஜபக்சக்களோடு முடங்கிப் போகுமானால், எதிர்வரும் காலங்களில் மீண்டும் ராஜபக்சக்களோ அவர்களின் ஆதரவாளர்களோ ஆட்சிபீடமேறுவதற்கான சாத்தியமுண்டு. சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பும் மகாவம்ச மனப்பாங்கும் மாறாமல் சிங்கள தேசத்தில் நீண்டகால மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

இலங்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் 2022 மார்ச் மாதத்தில் மட்டும் 30 வீதத்தால் அதிகரித்துள்ளன. சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்துள்ள நாட்டின் வாழ்க்கைச் செலவை நாட்டு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு மிக அகோரமாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக சனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி நாடு பூராவும் ஆயிரக்கணக்கானோர் அண்மையில் பாரிய ஆர்ப்பாட்டங்களில் வீதிகளில் இறங்கினர். 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கைத் தீவு உணவு, எரிபொருள், மருந்து மற்றும் பிற அத்தியாவசிய அடிப்படைப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது. இது அரசிற்கு ஒரு பாரிய நெருக்கடியாகும், 1948ல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியாகும். இப்படியான பெரு நிதி நெருக்கடி பல காரணிகளால் ஏற்படுகிறது, தமிழ் மக்களுடனான சிங்களப் பேரினவாதிகளின் இன முரண்பாட்டு அரசியல் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் உற்பத்திகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக தமிழர்களை அழிப்பதிலேயே சிங்களத் தலைமைகள் கவனத்தைச் செலுத்தியதின் விளைவே இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகும். சுpங்கள அரசு நடாத்தய தமிழின அழிப்பிற்கு வாங்கிய கடன் சுமையின் எதிர்த்தாக்கமே இலங்கை மக்களை பட்டினி போட வைத்துள்ளது. சிங்கள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கோட்டா அரசு இப்போது பணவீக்கத்திற்கு எதிராகவும், உணவு, எரிவாயு, மருந்துக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் 30 வருடங்களாக பட்டினியிலும் மண்ணெண்ணை ஒளியிலும் வாழ்ந்து பழகிய தமிழ் மக்கள் இன்றும்  நீதிக்காகவும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நெருக்கடிகளுக்கு மிக முக்கியமான காரணம் நீண்ட காலப் போர் தான். போருக்காகத்தான் கடன் பெறப்பட்டது. கொள்ளளவுக்கு மீறிய இராணுவம் உருவாக்கப்பட்டது. ஆயுதங்கள் வாங்கி குவிக்கப்பட்டன. ஊழலுக்கான சூழல் திறந்து விடப்பட்டது. இலங்கையின் அரச ஊதியம் பெறும் ஊழியர்களின் தொகையில் 48 வீதமான அரச ஊதியம் இராணுவத்திற்கே கொடுக்கப்படுகின்றது. 2009 ஆயத மௌனிப்பின் பின் இலங்கையின் இராணுவச் செலவுகள் 3 வீதமாக அதிகரித்துள்ளது. இராணுவ ஓய்வூதிய செலவுகள் மிகவேகமாக அதிகரித்து வருகின்றன.
சர்வதேச நாணய நியத்திடம் இருத்து நிதியைப் பெற்று இன்றைய பதட்டமான நிலையைச் சீர் செய்யலாம் என்ற கனவு உடனடியாக நிறைவேறாத பட்டசத்தில் நிலைமைகளைச் சீர்செய்யும் நோக்கில் மகிந்தரைப் பதவியில் இருந்து இறக்கி மக்களால் நிராகரிக்கப்பட்ட றணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் ஏற்றி உள்ளனர். மக்களால் நிராகரிக்கப்பட்ட றணில் விக்கிரமசிங்க ஆறாவது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளது உலக சாதனைகளில் ஒன்று எனபது உலகறிந்த விடயம். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை எந்த சிங்களக் கட்சிகளும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல. சிங்கள தேசத்தின் இரண்டு பெரிய கட்சிகளும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களோ நம்பத்தகுந்தவர்களோ அல்ல. அமைதிப் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ் மக்களையும் விடுதலைப்புலிகளையும் சுற்றி ஒர் சதிவலைப்பின்னலை ஏற்படுத்தி ஈழத்தமிழih அழித்தது றணில் விக்கிரமசிங்க என்பது யாரும் அறிந்த விடயம். இன்று இவரை ஆட்சியில் அமர்த்தும் சக்தி யார்? அவர்களின் நோக்கம் என்ன? இலங்கைத் தீவில் அவர்களின் நலன் என்ன? நாட்டுமக்களுக்கே றணிலின் வருகை பற்றி பாரிய சந்தேகங்கள் உள்ளது. இவர் சனநாயக முறையில் தெரிவுசெய்ப்பட்டவரா? ஆல்லது நியமன அடிப்படையில் உள் நுழைகிறாரா? இவரை உள் நுழைப்பவர்கள் இந்தியாவா? அமெரிக்காவா? மேற்கா?
நல்லாட்சி அரசு என்று தங்களைத் தாங்களே குறிப்பிட்ட காலத்தில் பிரதமராக இருந்த றணில் விக்கிரமசிங்க மீண்டும் அரியாசனத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிய நூற்றிற்கு மேற்பட்ட உறவுகள் மரணித்துள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார். இவர் பிரதமராக இருந்த போது ஐநா மனித உரிமை ஆணையகத்தில் ஈழத்தமிழரின் நீதி விசாரணையை நீர்த்துப்போவதற்கான பெரு முயற்சிகளைச் செய்து இனவழிப்பாளர்களைப் பாதுகாத்தார்.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை தமிழின அழிப்பிற்கு  காலதாமதம் இன்றி உடனடியான அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் சர்வேதச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற விடா முனைப்புடன் செயற்பட்டு சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தங்களை தொடர்ந்தும் கொடுக்கவேண்டும். தமிழர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட காணிகள் அனைத்தும் திருப்பி அளிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்புகளும் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடுகளைச் சீரழிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தீவின் தேசிய இனமாகிய தமிழர்கள் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கும் வகையில் தாயகத்திலும், புலத்திலும் வாழும் ஈழத்தமிழர் மத்தியில் ஐநாவின்  கண்காணிப்பில் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்காமல் இலங்கைத் தீவில் ஒரு பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்க முடியாது என்பதே நாம் வரலாற்று ரீதியாகக் கண்ட உண்மை.

முள்ளிவாய்கால் வரை கொண்டுவந்து விடப்பட்ட ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அந்தப்புள்ளியில் இருந்து முன்னகர்த்திச் சென்றிருக்க வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள், இன்றுவரை இனத்திற்கான அரசியலை முன்னெடுக்காது, அடுத்தவர்கள் நலன்சார்ந்தும், தம்மை வளப்படுத்தும் சுயலாப அரசியலையுமே மேற்கொண்டு வருகின்றனர். தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளை முன்னிறுத்தி எமது மக்களுக்கான நிரந்தர அரசியற் தீர்வை பெற்றுத்தருவதற்காகவே மக்கள் இவர்களுக்கு வாக்களித்தனர். நாம் காண்கின்ற ஒருசில அரசியல்வாதிகள் மட்டுமே ஓரளவிற்கு எமது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கின்றனர். இது ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காலம். ஓன்றுக்கும் உதவாத உக்கிப்போன சுயநல அரசியல் கலாச்சாhத்தை நடாத்தும் செயற்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை இனியும் வைத்துக்கொண்டு எமது விடியலைத் தேட முடியாது. இவர்கள் அனைவரையும் அகற்றி புதிய தலைமைகளை நாமும் தேடவேண்டிய காலம் வந்துவிட்டது என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews