முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்திற்கு முன்னால் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை பானையில் கஞ்சி காய்ச்சும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கஞ்சி பகிர்வோம் வலி சுமந்த கதை பகிர்வோம் எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் p2p பேரியக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுமாமி குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் வாசுகி சுதாகரன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews