இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்க நடவடிக்கை.

சதொச விற்பனை நிலையங்களில் ஏற்பட்டுள்ள மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை, விற்பனைக்காக பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கiமாக ஒரு கிலோகிராம் நாடு அரிசி 145 ரூபாய்க்கும் ஒரு கிலோகிராம் சம்பா 175 ரூபாய்க்கும் விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews