பொறிவைத்து காத்திருந்த பொலிஸார்..! கஞ்சா விற்பனை செய்தபோது கையும் களவுமாக சிக்கிய பெண், யாழ்.அரியாலையில்.. |

யாழ்.அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணை கண்காணித்துவந்த பொலிஸார் கஞ்சாவை  விற்பனை செய்த நிலையில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

உபபொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்து பெண்ணை கையும் களவுமாக கைது செய்ததுடன்,

விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினை அப் பெண்ணின் உடமையில் இருந்து பொலிஸார் மீட்டதுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் அரியாலை பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் போதை பொருள் விற்பனையில் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்த நிலையில் கடந்த 6 மாத காலப்பகுதிகளில்  யாழில் 8 பெண்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews