வடமராட்சியில் எரிபொருளுக்காக இன்றும் மிக நீண்ட வரிசை……!

வடமராட்சி மந்திகை, மற்றும் கிராமக்கோடு ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தமது பெற்றோல் வாகனங்களுடன் இன்றும்  மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
நேற்றைய தினம் ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென எரிபொருள் நிரப்பு இயந்திரம் செயலிழந்தமையால் பிற்பகல் 6:30 மணிமுதல் எரிபொருள் நிரப்புவது நிறுத்தப்பட்டதுடன் இன்று காலை முதல் மீண்டும் விநியோகிக்க படுகிறது.
மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு எட்டுமணிமுதல் இதுவரை எரிபொருள் விநியோகம் இடம் பெறுகிறது.
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நூற்றுக்கணக்கல் கொழுத்தும் வெயிலிலும் மிக நீண்ட வரிச காத்திருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews