அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்கு மேல் பறந்து பதற்றத்தை ஏற்படுத்திய விமானம்.

அமெரிக்க நாடாளுமன்ற கட்டட வளாகத்திற்கு மேலாக பறந்து சென்று பதற்றத்தை ஏற்படுத்திய விமானம் இராணுவ பயிற்சி விமானம் என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாக கட்டடத்திற்கு மேலாக மர்ம விமானம் பறந்து செல்வதாகவும், அதன் மூலம் ஆபத்து இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் உள்ளவர்களை வெளியேறுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அது இராணுவ விமானம் பயிற்சியில் ஈடுபட்டது என்பதால் பதற்றம் தணிந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews