ஒரு மோட்டார் சைக்கிளில் நான்கு சிறுவர்கள் பயணம், இருவர் பலி, இருவர் படுகாயம்…!

ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 சிறுவர்கள் விபத்தில் சிக்கியதில் 16 வயதான இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தம்புள்ளை – வேமெடில்ல நீர்த்தேக்கத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு நண்பர்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் பயணித்துள்ள நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த விபத்தில் 16 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவரும் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews