உக்ரைனில் புட்டின் இனப்படுகொலையை நடத்துகின்றார் : அமெரிக்க ஜனாதிபதி.

 உக்ரைனில் சர்வாதிகாரியான விளாடிமிர் புடின் இனப்படுகொலையை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன்முறையாக தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரேனியனாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை புடின் துடைக்க முயற்சிக்கிறார் என்பதும் தெளிவாகின்றது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு உக்ரைனில் ரஷ்யர்கள் செய்த கொடூரமான விடயங்கள் குறித்து இன்னும் பல சான்றுகள் வெளிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சான்றுகள் தொடர்பாக ஆராய சர்வதேச வழக்கறிஞர்களிடம் வழங்குவோம் என்றும் ஆனால் படுகொலை என்பது தனக்கு உறுதியாக தோன்றுவதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews