திருகோணமலை சென்ற ஹயஸ் வாகனம் விபத்து! ஒருவர் பலி, இருவர் படுகாயம்….!

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சென்ற ஹயஸ் வாகனம் கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்தள்ளனர். 

குறித்த விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கிளபென்பேர்க் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

திருகோணமலையிலிருந்து கிண்ணியா நோக்கிப் பயணித்த கனரக வாகனமும் கிண்ணியா பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி யாழ்ப்பாணத்திலிருந்து சென்றுகொண்டிருந்த வாகனமுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ரத்னகலாவதி (72வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த வயோதிபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews