நள்ளிரவு கடந்தும் ஜனாதிபதி செயலகம் மக்களின் முற்றுகைக்குள்..! அதியுச்ச பாதுகாப்பு மற்றும் பதற்றத்தில் காலி முகத்திடல்.. |

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதர நெருக்கடிக்கு பொறுப்கூறும் வகையில் ஜனாபதிபதி பதவி விலகவேண்டும். எனக்கோரி ஜனாதிபதி செயலகம் முன்பாக நேற்று மாலை கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவு தாண்டியும் போராட்டத்தை தொடர்ந்தும் நடாத்தியிருக்கின்றனர்.

ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலை மறித்து நள்ளிரவு 12 மணி தாண்டியும் போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதுவரை போராட்டக்காரர்கள் யாரும் தாக்கப்படவில்லை.

அல்லது கலைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews