எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி இல்லை மக்கள் விடுதலை முன்னணி!

எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயாராக இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனை தெரிவித்தார்.

குற்றம் மற்றும் ஊழலில் ஈடுபடாத நபர்களுடன் இணைந்து பணியாற்ற கட்சி தயாராக உள்ளது என்றார். மக்கள் விடுதலை முன்னணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கருத்துக்களை அவர் முற்றாக நிராகரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக்காலத்தில் பொது ஆணையை காட்டிக்கொடுத்ததால், அவருடன் மக்கள் விடுதலை முன்னணி கைகோர்க்காது எனவும் லால்காந்த குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin