யாழ்.சின்னக்கடை பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவனிடம் வழிப்பறி..! கஞ்சா வைத்திருப்பதாக அச்சுறுத்தி.. |

வீதியால் சைக்கிளில் சென்ற பாடசாலை மாணவனை வழிமறித்து மாணவனை அச்சுறுத்தியதுடன் அவனிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்.சின்னக்கடை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. யாழ்.நாவற்குழி – ஐயனார் கோவிலடியை சேர்ந்த குறித்த மாணவன் யாழ்.ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையத்தற்கு வந்துள்ளார்.

இதன்போது சின்னக்கடை பகுதியில் மாணவனை வழிமறித்த வழிப்பறி கொள்ளை கும்பல் கஞ்சா இருப்பதாக கூறி மாணவனை அச்சுறுத்தியதுடன் சோதனையும் செய்துள்ளனர். இதன்போது மாணவனிடமிருந்த 2 ஆயிரம் ரூபாய்

பணத்தை பறித்த வழிப்பறி கொள்ளயர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews