![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/01/IMG-20220117-WA0003-818x490.jpg)
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரால் உந்துருளி ஒன்றிற்க்கு தீ மூட்டப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/01/IMG-20220117-WA0003-300x142.jpg)
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் 16/01/2022 இரவு ஒன்பது முப்பது மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/01/IMG-20220117-WA0001-300x225.jpg)
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் இரவு ஒன்பது முப்பது மணியளவில் உந்துருளி தீப்பற்றி எரிந்ததை அவதானித்த. வீட்டுக்காரர்கள் ஓடிச் சென்றபோது நபர் ஒருவர் ஓடிச் சென்றதையும் அவதானித்துள்ளனர்.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/01/IMG-20220117-WA0004-142x300.jpg)
உந்துருளியின் தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அது முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/01/IMG-20220117-WA0002-300x225.jpg)
இது தொடர்பில் மருதங்கேணி பொலீசாரை தொடர்புகொண்டு கேட்ட போது குறித்த சம்பவம் குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றிருக்காலம் என சந்தேகிப்பதாகவும் சம்பவம் தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.