மாடு மேய்க்க சென்றிருந்த தாயும், 3 வயது குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதி!

தாயாருடன் மாடு மேய்க்கச் சென்றருந்த 3 வயது குழந்தையும், தாயும் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. நேற்று (27-12-2021) மாலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரும் அவருடன் கூட இருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்றும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளது. 

இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகிய அவர்கள் உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சி

கிச்சை பெற்று வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews