யாழ். நல்லூர் பிரதேச சபையின் பாதீடு நிறைவு.

யாழ். நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குற்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில்  சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்கள், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தல ஒரு உறுப்பினர் என 12 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிர  2 உறுப்பினர்கள் என 8 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனால் தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் 6 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சை குழு சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தல ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews