கேரளா கஞ்சா மீட்பு, போலீஸ் அதிரடி..!

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் வீட்டின் பின் பகுதியில் இருந்து 26kg கேரளா கஞ்சா தர்மபுரம் பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கல்லாறு பகுதி முழுவதும் விசேட சுற்றி வளைத்து தேடுதல் நடவெடிக்கை  மேற்கொள்ளபட்டது.
இதன் போதே  குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது
எனினும் சந்தேக நபர் எவரும் கைது செய்யல்லடவில்லை என்று பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிப்பதுடன்  மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews