திரையரங்குகளை திறக்க அனுமதி.

25 வீதமான பார்வையாளர்களுடன், எதிர்வரும் 21ம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்கள் செயற்படும் விதம் தொடர்பான சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டது.இந்த வழிகாட்டுதலிலேயே திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த சுகாதார வழிகாட்டலில், உள்ளக அரங்குகளில் திருமண நிகழ்வுகளை 50 பேருடன் நடத்துமாறும், வெளியக பகுதிகளில் 75 பேருடன் நடத்துமாறும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,சுகாதார வழிகாட்டுதல்களின்படி பல்கலைக்கழகங்கள் செயல்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews