வயோதிபப் பெண் படுகொலை! – 25,000 ரூபாய் பணம் கொள்ளை

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த நபர் ஒருவர், வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணை படுகொலை செய்துவிட்டு, சுமார் 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில், இராஜகிரிய வீதியை சேர்ந்த 71 வயது பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews