வாகரையில் கஞ்சா, ஜஸ் போதைப் பொருள். பொலிஸ் கான்ஸ்டபிள் கைது.

மட்டக்களப்பு வாரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கஞ்சா மற்றும் ஜஸ் போதை பொருளுடன் நேற்று சனிக்கிழமை (5) இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் காஸ்டபில் போதை பொருள் பாவனையில் ஈடுபட்டுவருவதாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை கண்காணித்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு கடமையை முடித்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி போது அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ஜஸ் போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய மகியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் போதைக்கு  அடிமையாகியுள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews