சர்வதேச கண்டல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவரம் நடுகை

சர்வதேச கண்டல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டன. அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிராந்திய வனவள பிராந்தியத்தினால் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்டல் ஒதுக்கவனப் பிரதேசத்தில் பிராந்திய வன அதிகாரி ஏ.எல்.இலியாஸ் தலைமையில் கண்டல் நடுகை இடம் பெற்றது.

ஜூலை மாதம் 26ஆம் திகதி சர்வதேச கண்டல் சர்வதேச கண்டல் தினம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த முன்னிட்டு இவ் வருடத்திற்கான இன்று வனபரிபாலனத் திணைக்களத்தினால் கண்டல் நடுகை செய்யப்பட்டன.

நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவுப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் வன பரிபாலத் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் காரைதீவு இராமகிருஸ்னமிஸன் பெண்கள் பாடசாலை மாணவிகள் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews