தமிழர்களின் அரசியல் உரிமையுடன் கூடிய அரசியலை செய்கிறேன்: இரா.சாணக்கியன்

எனது அரசியல் தமிழர்களின் அரசியல் உரிமையுடன் கூடிய எதிர்காலத்தினை நோக்கி இருக்குமே தவிர வேறு எதுவும் இருக்காது.ஒரு சிலரின் அரசியல் தாங்கள் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகயிருக்கவேண்டும் என்பதே நோக்கமாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஒரு சிலருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை விடுத்து வேறு எதுவும் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டபோது அதற்கு தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆதரவாக வாக்களித்தமை தொடர்ந்து அந்த சமூகங்கள் அவர்கள் தொடர்பில் அவதானமாக எதிர்காலத்தில் செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews