தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கும் ‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. பகிர்ந்துண்டு வாழ்வோம்’ என்ற கருப்பொருளில் செயற்படுத்தப்பட்டுவரும் இத்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.11.2023) அரியாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை... Read more »

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டடமும் சீனா வசமாகின்றதா?

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன... Read more »

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும்…! சபா குகதாஸ்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பார் என அவர் சார்ந்த வட்டாரங்கள் புகழாராம் சூடினாலும் புள்ளிவிபர ரீதியாக மாற்றம் எதுவும் நிகழவில்லை!  மாறாக நாட்டின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் ஜனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவனவாகவும்... Read more »

சீன தூதுவர் சற்று முன்னர் சக்கோட்டை முனைக்கு…!

இலங்கைக்கான சீன தூதுவர் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு வந்து செனறுள்ளார். 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர் சக்கோட்டை முனைக்கு இரண்டாவது தடவையாக  வருகைதந்து  பார்வையிட்டு சென்றுள்ளார் வடக்குக்கான 150 மில்லியன் உதவி திட்டத்தை பார்வையிடவே வருகை... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியினரால் தீப்பந்த போராட்டம்!

தீப்பந்த போராட்டம் ஒன்று  நேற்றையதினம்  முன்னெடுக்கப்பட்டது. நேற்று  மாலை 6.30 மணியளவில் கொல்லங்கலட்டி பகுதியில் இருந்து கீரிமலை சிவன்கோவில் வரை இந்த தீப்பந்த போராட்ட பேரணி இடம்பெற்றது. மின்சார விலை அதிகரிப்புக்கு எதிராகவும், எரிபொருள் அதிகரிப்புக்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில்... Read more »

இலங்கை அதிபர் சேவை III இற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு – 2023*

மத்திய கல்வி அமைச்சினால் இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட 401 நியமனதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2023.11.04 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளமையினால் நியமனம் செய்யப்படவுள்ள நியமனதாரிகள்... Read more »

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி துப்புரவு பணி ஆரம்பம்..!

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் ஈடுபட்டனர். அதன்பின் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர். Read more »

படுகொலை செய்யப்பட்ட கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் 15ம் ஆண்டு நினைவேந்தல்…!

படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2008.11.01 அன்று சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட புருசோத்தமனின் நினைவு தினம்... Read more »

யாழ்ப்பாணத்தில் திடீரென வீதிக்கு இறங்கிய அதிபர் ஆசிரியர்கள்….!

நேற்றுமுன்தினம் இசுறுபாய முன்பாக அதிபர், ஆசிரியர்கள் நடாத்திய போராட்ட ஊர்வலத்தின் மீது அரசு நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் பாடசாலை நிறைவடைந்த பின்னர் பாடசாலைகளின் முன்பாக அதிபர், ஆசிரியர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் பெண்கள் பாடசாலை... Read more »

தாவடியில் 10 வயதுச் சிறுவனுக்கு பியர் பருக்கியவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனுக்கு பியர் பருக்கிய ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் முச்சக்கர வண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு பியரினை பருக்கியுள்ளார். இது குறித்து சிறுவனின்... Read more »