இலங்கையில் மீண்டும் நீண்டநேர மின்தடை ஏற்படும் அபாயம்

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன குறிப்பிட்டார்.... Read more »

தமிழ் அரசியல் கைதி செ.சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையிலேயே!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்ட, தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அவர் தொடர்ந்தும் சிறையிலேயே வாடுகிறார் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. சதீஸ்குமாருக்கு கடந்த முதலாம்... Read more »

13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை: முன்னாள் ஜனாதிபதி!

13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். 13ஆவது திருத்த சட்டம் அவசியம் என்று தற்போதைய அரசாங்கம்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் 7 துவிச்சக்கர வண்டிகளும், 100,000 ரூபா நிதியும் வழஙகிவைப்பு…..!

வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்  371000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும், 100,000 ரூபா நிதியும் நேற்று  வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வாராந்தம் உதவி வழங்கும்  நிகழ்வு நேற்று 24/02/2023 இடம் பெற்றது. இதில்    07 மாணவர்களிற்கு  துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டதுடன் ஆலயம் மற்றும் நடனப் போட்டிகளுக்கு... Read more »

வடக்கில் அர்ப்பணிப்போடு களப்பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்! –

வடக்கில் மனிதநேயத்தோடும் அர்ப்பணிப்போடும் களப்பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் நேற்று  கௌரவிக்கப்பட்டனர், அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வீ.சுப்பிரமணியம், மற்றும் ஏற்பாட்டாளர் அன்ரனி ஜேசுதாசன் ஆகியோர் தீவிர முயற்சியில்   மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக மனிதநேயத்தோடும், அர்ப்பணிப்போடும், தமது கடமைகளை வகைப் பொறுப்போடு... Read more »

யாழ்.சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை பகுதிகளில் 30 இடங்களில் நுாதன முறையில் பண மோசடி..!

யாழ்.சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம் உள்ளிட்ட சில பகுதிகளில் முதியவர்களை இலக்குவைத்து சுமார் 30க்கும் மேற்பெட்ட பண மோசடி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் மேற்படி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்ற நபர் ஒருவர், தான் அப்பகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர் என அறிமுகப்படுத்திக்கொண்டு,... Read more »

இஸ்ரேலில் தாதி வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி!! போலி அரச முத்திரைகளுடன் கைதான ஆசாமி… |

இஸ்ரேல் நாட்டில் தாதி வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுவந்த ஏஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரச இலட்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் போலி முத்திரைகளுடன் தயாரிக்கப்பட்ட போலி விண்ணப்பங்களை வழங்கி இளைஞர்களை தவறாக வழிநடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக... Read more »

வளர்ப்புத் தந்தையால் துஷ்ப்பிரயோகத்திற்குள்ளான பாடசாலை மாணவி! சந்தேகநபர் கைது.. |

வளர்ப்புத் தந்தையால் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவியின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்படி மாணவியின் தந்தை இறுதி யுத்ததில் உயிரிழந்த நிலையில், தாய் இரண்டாவது தரம் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது... Read more »

யாழில் கப்பம் கோரல், ஏனைய இடையூறுகள் தொடர்பில் முறையிட்டால் நடவடிக்கை!டிஐஜி

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன... Read more »

யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக இழுத்து மூடப்பட்ட பாடசாலை

யாழ்ப்பாணம் – நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இல்லாத காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இருப்பினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை வட மாகாண கல்வித் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Read more »