வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம்….! செல்வம் பா.உ.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் போராட்டத்தை தயவு செய்து அரசியல் ஆக்காதீர்கள் என நாடளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் உறவுகளிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். வவுனியாவில் நேற்று (23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து... Read more »

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல்….!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, களனி பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் (IUBF) ஒருங்கிணைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர், நாளைய தினம், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை (FR)... Read more »

நாளை மூன்று மணிநேரம் மின் வெட்டு….. !

நாளைய தினம் (25) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 1 மணிநேரமும் 40 நிமிடங்களும், இரவு ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும்... Read more »

அடையாள அட்டை காணாமல் போனால் உடனடியாக போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய பணிப்பு….!

நாட்டில் காணாமல் போன அடையாள அட்டைகளுக்காக பொலிஸ் அறிக்கைகளை பெறுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தியோகபூர்வமற்ற முறையில் பொலிஸ் அறிக்கைகளை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பொலிஸ் நிலையப் பரிசோதகர் நாயகத்திற்கு விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய, இந்த சுற்றறிக்கை... Read more »

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வருகையில் தாமதம்….!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னரே நாடு திரும்ப  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் பின்னரே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,... Read more »

கனடாவில் தேடப்படும் ஈழத் தமிழர்….!

கனடாவில் கொலை குற்றத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் தமிழர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர். எவ்வாறாயினும், குறித்த நபர் ஆபத்தானவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தானவர் என்று அறிவிக்கப்பட்டுள்ள 34 வயதான Ryan என்ற பெயரால் அறியப்படும் சதீஸ்குமார் ராஜரத்தினம் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு... Read more »

இரண்டாவது நாளாக குடத்தனை உப தபாலகருக்கு எதிராக மக்கள் போராட்டம்……!

குடத்தனை உப தபாலகருக்கு எதிராக இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில்  நேற்று ஈடுபட்டனர். கடந்த 2018 ம் ஆண்டு வரை உப தபாலதிபாராக பணியாற்றிவந்திருந்தவர் வறிய மக்களது பொதுசன மாதாந்த கொடுப்பனவு, மின்சார பட்டியல் கொடுப்பனவு, தேசிய சேமிப்பு வங்கி உட்பட பல்வேறு... Read more »

உள்ளக சதி, வல்வெட்டித்துறை நகரசபை கூட்டமைப்பிடமிருந்து பறிபோனது…..!

வல்வெட்டித்துறை நகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து நேற்று பறிபோயுள்ளது. வெற்றிடமாகவிருந்த நகரசபை தவிசாளர் பதவிக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் சுரேஸ்பிரேமச்சந்திரன் அணியைச்சேர்ந்த இராமச்சந்திரன் சுரேன் குலுக்கல் முறையில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வெறிதாகிய பதவிக்கான தேர்தல் நேற்று காலை 9.30 மணிக்கு வல்வெட்டித்துறை நகரசபை மண்டபத்தில்... Read more »

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்காக இலங்கை வரும் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் இலங்கை வருகை தரவுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்... Read more »

இன்று முதல் அரசாங்க ஊழியர்களின் பணி வழமைக்கு…..!

அரசாங்க ஊழியர்களை இன்று முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருந்த எரிபொருள் தட்டுபாடு காரணமாக அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும்... Read more »