ஆய்வுகூடத் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களின் பகிஷ்கரிப்பால் வடக்கில் சுகாதாரதுறை முடங்கியது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் நலன்புரி சங்கம் அவசர உதவி வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஆய்வுகூடத் தொழிநுட்பவியலாளர்களின் (எம்.எல்.ரி) பணிப் பகிஷ்கரிப்பால் வடக்கில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.... Read more »
இன்று (08) முதல் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் வீதியை நவீனப்படுத்துவதற்கு சுமார் 05... Read more »
105 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரெஞ்சு பயணிகள் கப்பலான லீ செம்லைன் நேற்று (07.01.2023)மாலை காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து காலியை வந்தடைந்ததுடன் திருகோணமலைக்கு புறப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் நாளை (09.01.2023) இலங்கையிலிருந்து புறப்படும்.... Read more »
நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும் என்று பொது சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். தற்பொழுது பல நாடுகளில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இலங்கையில்... Read more »
நாடு உணவுக்கேபணம் இல்லாது அகல பாதாளத்தில் இருக்கின்ற நிலையில் மரணவீட்டில் திருமணத்துக்கு நாள் பார்க்கின்றது போல மக்கள் பொருளாதாரத்தால் கஷ;டப்படுகின்றநிலையில் தேர்தலை வைப்பதால் மக்களுக்கு என்ன நன்மை? எனவே போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்கான செலவை வழங்கவேண்டும் நாடு இருக்கின்ற நிலவரத்தில் தேர்தல் தீர்வாகாது என... Read more »
வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இறுதி நிமிடத்தில் ஒத்திவைப்பதற்கான ஆயத்தங்களில் அரசாங்கம் இன்னமும் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வேட்புமனு தாக்கல்... Read more »
கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். பெத்தியகொட பிரதேசத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கருத்து முரண்பாடு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதங்கள்... Read more »
மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தப்பி ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு சக்திவாய்ந்த வெளிநாட்டு அரசொன்று அதிநவீன ராஜதந்திர நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோத்தபாய ராஜபக்சவின் தலைமையில் நாடு திவாலாகிவிட்டதை சாதகமாக பயன்படுத்தி இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த... Read more »
2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் அவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.ஆனால் நாடு இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளிலும் பிச்சை எடுக்காமல் தப்பிப்பிழைக்க முடியாது என்பதே ... Read more »
காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜவுடன் அமைச்சின் செயலாளர் அடங்கிய குழு ஒன்று நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டது. காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்தினை ஆரம்பிப்பதற்கு... Read more »