குருந்தூர் மலை அராஜகத்திற்கு எதிராக இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை கடுமையான கண்டனம் 

17 பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட முல்லைத்தீவு ஆதிசிவன் ஆலயத்தில் சைவமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் வழிபாட்டுக்கு தடையேற்படுத்தும் வகையில் கற்பூரத் தீபம் சப்பாத்துக்களால் நசுக்கப்பட்டு, அநாகரிகமான முறையில் பிக்குகள் நடந்துகொண்டமை சைவமக்கள் மீதான அராஜக வெளிப்பாடே இது நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பை சீர்குலைக்கும்,... Read more »

36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை என வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை..!

36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை என வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினரின் 13 வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தினை,... Read more »

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட ஆடிப்பிறப்பு விழா!

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் ஆடிப்பிறப்பு விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆடிப்பிறப்பு விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. செம்மணி  வீதியில் உள்ள கல்வி அமைச்சில் ... Read more »

மண்டைதீவில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பதற்கு திகதியிட்டுவிட்டு பதுங்கிக் கொண்டது நில அளவை திணைக்களம்…!

மண்டைதீவு கிழக்கு ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான 4 பரப்பு காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக இன்றையதினம் அளவீடு செய்யப்போவதாக நில அளவை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணியின் உரிமையாளர், பொதுமக்கள், தமிழ் தேசிய... Read more »

சூழ்ச்சிகளால் அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சி முயற்சிப்பது வெட்கக் கேடானது – ஷாந்த பண்டார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சி , சூழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இது வெட்கக் கேடான விடயமாகும். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார... Read more »

பருத்தித்துறை துறைமுக கடலில் சடலம்….!

பருத்தித்துறை துறைமுக கடலில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகிறது. இன்று அதிகாலையிலிருந்து குறித்த சடலம் கடலில் மிதந்த வண்ணம் காணப்படுகிறது. சடலம் இதுவரை அடையாளம் காண்ப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்திறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

உலருணவுப் பொதிகளை நேரில் சென்று வழங்கிய தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமானது, அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16.07... Read more »

தங்கத் தாத்தாவின் சிலையருகே ஆடிப்பிறப்பு விழா…!

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள, தங்கத் தாத்தா என அழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையருகே ஆடிப்பிறப்பு தின விழா இன்று காலை நடைபெற்றது.  தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.எஸ்.சிவஞானராஜா அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு... Read more »

வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன – யாழ். அரசாங்க அதிபர் கவலை

இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன என யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன்  தெரிவித்துள்ளார். நேற்று (16)  நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவில்  உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மரபுரிமைகளைப் பாதுகாப்பது என்பது... Read more »

விதையனைத்தும் விருட்சமே குழுமத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் முன்னெடுப்பு

அமரர் நாகலிங்கம் தெய்வேந்திரம் அவர்களின் 2வது நினைவுதினத்தை முன்னிட்டு, “விதையனைத்தும் விருட்சமே குழுமத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த இரத்ததான முகாமானது யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நேற்றையதினம் (16) காலை 8.30 தொடக்கம் மாலை 3.30 வரை முன்னெடுக்கப்பட்டது. ... Read more »