14 தங்க பாளங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

தாய்லாந்திலிருந்து, இலங்கைக்கு கொண்டுவர முயன்ற 27 மில்லியன் ரூபா பெறுமதியான 14 தங்க பாளங்களுடன், ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்திலிருந்து, நாட்டுக்கு வந்த குறித்த பயணியிடம் ஒரு கிலோ 314 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து... Read more »

இரத்தினபுரி மாவட்டம் தொட்டிகலம மலைப்பகுதியில் தீ பரவல்

இரத்தினபுரி மாவட்டம் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குட்டபிட்டிய பகுதியில் உள்ள தொட்டிகலம மலைப்பகுதியில் திடீரென தீ பரவியுள்ளது. பெல்மடுல்ல பொலிஸாருக்கு நேற்றிரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயினால்... Read more »

இலங்கை – இந்தியா இடையில் பாலம் கட்டுவது குறித்து கர்தினால் ஆண்டகை கருத்து

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலத்தை கட்டுவதற்கு முன்னர் அது குறித்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் பாலமொன்றை கட்டுவதென்றால் அது குறித்து... Read more »

கனடா விசா பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி

கனடா விசா பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 5 பேரை ஏமாற்றி, 26 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரும் கனடா விசாவினை... Read more »

இந்தியா சென்ற ஜனாதிபதியால் எமக்கு பயனில்லை – சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் தெரிவிப்பு

அண்மையில் இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் தெரிவித்தார். நேற்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்... Read more »

மட்டு வந்தாறுமூலையில் மனைவியை குத்தி கொலை செய்து சிறையில் அடைக்கப்பட்டவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த ஏப்பிரல் மாதம் 13 ம் திகதி... Read more »

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்ததின நிகழ்வு…!(video)

hமறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் 26.08.2023 மாலை பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் இடம்பெற்றது. இதன்பொழுது அமிர்தலிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது. தொடர்ச்சியாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் அமிர்தலிங்கத்தின் நினைவு... Read more »

மட்டு வாகரையில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் 18 இளைஞனுக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 15வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்ட 18 வயதுடைய இளைஞன் ஒருவரைஎதிர்வரும் 7 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று சனிக்கிழமை (26) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த... Read more »

தம்பிலுவில் கொம்புமுறி விளையாட்டில் தென்சேரி குடி வென்றது!

தம்பிலுவில் கிராமத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டு   (26)சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கண்ணகியம்மன் ஆலய முன்றலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 2022.09.19 தொடக்கம் 2022.09.26 இன்று வரை 8 நாட்கள் வடசேரி, தென்சேரி குடிகளினால் விளையாட்டு இடம்பெறுகின்றமை வழக்கம். கடும்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  கல்விச்சுற்றுலாவிற்க்காக உதவி……!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச் சுற்றுலா மற்றும் திருத்தல யாத்திரைக்கான நிதி உதவியாக ரூபா 100,000 நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம், சைவசித்தாந்தத்துறை மாணவர்களின் கல்விச்சுற்றுலா, மற்றும் திருத்தல யாத்திரைக்காகவே குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  இந்... Read more »