பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீதே, இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,... Read more »
ஈரானின் புதிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நேற்று அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.தூதுவர் அலிரேசா டெல்கோஷ், பழங்காலத்திலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் நெருக்கமான சமூக கலாசார உறவுகளை குறிப்பிட்டு, தனது இராஜதந்திர பதவிக் காலத்தில் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார... Read more »
கோப்பாய் தேசோதய சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர் கோரவிப்பு நேற்று உரும்பிராயில் இடம் பெற்றது. கோப்பாய் தேசோதய தலைவர் இ.மயில்வாகனம் தலமையில் உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூக நிலையத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு முதியவர்களை கௌரவித்தார்.... Read more »
கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியாரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிசாருக்கு தகவல்... Read more »
சம்பந்தன் – சுமந்திரன் பனிப்போர் பலத்த வாதப்பிரதிவாதங்களை தமிழ்ச்சூழலில் உருவாக்கியுள்ளது. சம்பந்தனுக்கு முதுமை நிலை ஏற்பட்டுள்ளமையால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச்செய்ய முடியாதவராக இருக்கின்றார். இது வரை இடம் பெற்ற 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்கள் தான் பாராளுமன்றத்திற்கு சம்பந்தன் சமூகமளித்திருக்கின்றார். திருகோணமலை... Read more »
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைகள் மீதான சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்பையும், தொடர்ந்து இடம்பெறும் கால்நடைகளின் உயிர் கொலைகளை கண்டித்தும் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மட்டக்களப்புக்கு சென்ற எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (05.11.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர். 50... Read more »
திஸ்ஸ விகாரையில் ‘கஜினமகா பூஜை வழிபாடுகளானது காலை ஆரம்பமாகியுள்ளது. இதன்போது சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வரும்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி எங்கள் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்று” உள்ளிட்ட... Read more »
டிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் சிறுப்பிட்டி பகுதியிலேயே இவ்வாறான நிலை இன்று அதிகாலை ஏற்பட்டது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்... Read more »
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கும் ‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. பகிர்ந்துண்டு வாழ்வோம்’ என்ற கருப்பொருளில் செயற்படுத்தப்பட்டுவரும் இத்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.11.2023) அரியாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை... Read more »
யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன... Read more »