மன்னார்   எருக்கலம் பிட்டி பகுதியில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான சங்குகளுடன் மூவர் கைது.

மன்னார் கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து எருக்கலம் பிட்டி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சங்குகளை உடமையில் வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது... Read more »

அநுரகுமார ஜனாதிபதியானதும் பெண் ஒருவருக்கே பிரதமர் பதவி!

தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானதன் பின்னர் பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்... Read more »

பேருந்துடன், மோட்டார் சைக்கிள் மோதி பாரிய விபத்து!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, சிலாவத்தை சந்திக்கு அண்மித்த போது, பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட... Read more »

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு :-மக்கள் அசௌகரியம்.

நாடளாவிய ரீதியில் வைத்திய சாலையின் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. இந்த நடவடிக்கையால்  மருத்துவமனை கட்டமைப்பை பாதித்துள்ளது. வைத்தியர்களின் கொடுப்பனவுகள் 35 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள... Read more »

வடக்கு மாகாண புதிர் எடுத்தலும், தைப்பொங்கல் விழாவும் இன்று இடம்பெற்றது!

வடக்கு மாகாண புதிர் எடுத்தலும், தைப்பொங்கல் விழாவும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்லவராயன்கட்டு மாதிரி கிராமத்தில் சிறிநாகபூசனி அம்பாள் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்... Read more »

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் அவதி

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை  சிற்றூளியர்கள் , பாமசியாளர்கள் , தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 16.01.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த... Read more »

யாழ் நல்லூர் அரசடி பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவி சங்கரி பலி!!

டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ் நல்லுார் அரசடி பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியான ஒரு பிள்ளையின் தாயான சங்கரி மகாலிங்கசிவக்குருக்கள் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் வெகு தீவிர நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறித்த காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள்... Read more »

கல்வி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் பரீட்சை வினாத்தாள்களை ஆசிரியர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றார்களா என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். இந்த வருட உயர் தரப் பரீட்சையின் விவசாய பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்... Read more »

மருதங்கேணியில் இரத்ததான முகாம்-இளைஞர்களே உதிரம் கொடுத்து உயிர் காப்போம்

நாளைய தினம் புதன்கிழமை 17.01.2023 அன்று மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்-நரேந்திரன் Sir தலைமையில் குருதிக்கொடை முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இரத்தவங்கியில் O Positive வகை குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நற்பணி ஏற்பாடுசெய்யப்பட்டு வைத்தியர்,வைத்தியசாலை ஊழியர்கள், (PHI) ஆகியோர் குருதித்தானம் வழங்கவுள்ளார்கள்.... Read more »

*ஒற்றை நூலில் வல்வை வாண் வெளியில் நடந்த அதிசயம்*

வல்வெட்டித்துறை விசித்திர விநோத பட்டப் போட்டி திருவிழாவிலே நேற்றைய தினம் நூற்றுக்கணக்கான பட்டங்கள்‌ வானிலே பறக்க விடப்பட்டன அந்த வகையில்  95 young stars அணியின்‌ தலைவர் விநோதனின் கற்பனைத்திறனிலும்‌கைவண்ணத்திலும் உருவான விமானம் தாங்கி போர்க்கப்பல் பட்டம் நேற்றுபோட்டிக்காக பறக்க விடப்பட்டது. பட்டம் வான்... Read more »