பணவீக்கம் குறைவடையும் – மத்திய வங்கி நம்பிக்கை

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பணவீக்க நிலைமை கிரமமாக குறைவடையும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மின்சாரம், நீர் மற்றும் பெறுமதி சேர் வரி என்பனவற்றினால் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டி அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்தது. எனினும் எதிர்வரும் நாட்களில் பணவீக்கம்... Read more »

மகிந்தவின் அதிரடி அறிவிப்பு – சூடு பிடிக்கும் தென்னிங்கை அரசியல்

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசியத் தேர்தலை எதிர்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். மார்ச் மாதத்திற்குப் பின்னர் பொதுத் தேர்தல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக... Read more »

வாள்வெட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் கடந்த 06.10.2022 அன்றைய தினம்  வட்டக்கச்சி மாயனூர் பகுதியில் வசித்துவந்த இளம் குடும்பஸ்தரான 33 வயதுடைய ஜெயசீலன் என்ற 03 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்திருந்தார். வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்... Read more »

யாழில் தனியார் காணியொன்றில் குண்டுகள் மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி – அட்டகிரி பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணியின் உரிமையாளர் உழவு இயந்திரம் மூலம் காணியை உழுதுகொண்டு இருந்தவேளை குறித்த குண்டுகள் இரண்டு பைகளினுள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், குறித்த... Read more »

அரசாங்கம் தேர்தல்களை நடத்த அஞ்சுகின்றது! சஜித் பிரேமதாச விமர்சனம்

தற்போதைய அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு அஞ்சி அதனை ஒத்திவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். அது தொடர்பில் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நெருங்கி வருகின்றது. எனினும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்தல்,... Read more »

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் – அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை தொடர்ந்து பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அதன் ஆழத்தையும் சேதத்தையும் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து இலங்கையர்களினதும் பொறுப்பாகும் என... Read more »

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகுறைப்பு! வெளியானது புதிய விலை

எரிவாயு கொள்கலனின் விலையை குறைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 500 ரூபாவால் இன்று குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 5300 ரூபாவாக... Read more »

இலங்கை உள்ளிட்ட 54 நாடுகளுக்கு நிவாரணம் தேவை! ஐ.நா அறிவிப்பு

உலகளவில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், உலகில் வறிய மக்கள் மிகவும் அதிகமாக வாழும் நாடுகளான இலங்கை உள்ளிட்ட 54 நாடுகளுக்கு அவசர கடன் உதவி தேவை என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நா இன்று (11.10.2022) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ந்து... Read more »

ஆசிரியர்களுக்கான விசேட அறிவிப்பு

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி தர்மசேன இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான உயர்தர... Read more »

எதிர்வரும் நான்கு தினங்களுக்கான மின்வெட்டு விபரம் வெளியானது

நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும்... Read more »