8 இலங்கையர்கள் உட்பட 26 மாலுமிகளுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் நைஜீரிய நீதிமன்றால் விடுவிப்பு
ஆகஸ்ட் 2022 முதல் நைஜீரியா மற்றும் ஈக்குவடோரியல் கினியாவில் சர்ச்சைக்குரிய எண்ணெய் கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த M/T Heroic Idun கப்பல் ஏப்ரல் 28 அன்று போர்ட் ஹார்கோர்ட்டில் உள்ள நைஜீரியாவின் பெடரல் உயர்நீதிமன்றத்தால் எட்டு இலங்கையர்களை உள்ளடக்கிய மாலுமிகளுடன் விடுவிக்கப்பட்டது. நைஜீரிய... Read more »
நேற்று திங்கட்கிழமை (01.05.2023) நல்லூரில் எழுச்சி பூர்வமாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்துக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா. பார்த்தீபன் தலைமை தாங்கினார். யாழ்ப்பாணப்... Read more »
பொன்னாலை மேற்கு பொன்னாலை பகுதியில், பிறந்து 34 நாட்களேயான குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் மூக்கில் இருந்து இரத்தம் வேளியேறியிருந்தது. அதனையடுத்து குழந்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் என்ன... Read more »
இந்த வருடம் இதுவரை 1132 டெங்கு நோயாளிகள் யாழ் மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தொற்று நோய்களான டெங்கு மற்றும் மலேரியா தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க பருத்தித்துறை கொன்றை மர நிழல் நாயகி கோட்டுவாசல் சிறி சண்டிகா பரமேஸ்வரி ஆலய சுபகிருது வருட மகோற்சவத்தின் ஏழாம் திருவிழாவான திருமுழுக்கு திருவிழா இன்று அதிகாலை 4:00 மணியளவில் உஸக்கால பூசையுடன் ஆரம்பமாகி, தம்ப பூசை வசந்த மண்டப பூசை... Read more »
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் வரணி எருவன் பகுதியில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது வடமராட்சி அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம்... Read more »
வாராந்த நிகழ்வில் 04மாணவர்களிற்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. கிளிநொச்சி – பொன்நகர் மத்தி கிராமத்தை வசிப்பிடமாகவுள்ள திரு. இ. செபஸ்ரியான் பீற்றர், கயேந்திரன் நாகராணி, திரு.கந்தசாமி உதயகுமார் ஆகிய மாணவர்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டம் – உடையார்கட்டு தெற்கு, உடையார்கட்டை சேர்ந்த அழகு சர்மிளா என்பவர்க்கும் துவிச்சக்கரவண்டிகள்... Read more »
வட்டக்கச்சி மாவவனூர் பகுதியில் வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வட்டக்கச்சி மாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இரவு குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read more »
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ் .லவகுமார் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை தனியார் விடுதியில்... Read more »
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Read more »