ஏற்கனவே ஜனநாயகமும் சட்ட ஆட்சியும் பக்கசார்பாக இருந்து வரும் அரசியல் சூழலில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதிக்கு நேர்ந்துள்ள கதி ஆச்சரியம் தரும் ஒன்றல்ல….! சி.க.செந்தில்வேல்

இலங்கையில் ஏற்கனவே ஜனநாயகமும் சட்ட ஆட்சியும் பக்கசார்பாக இருந்து வரும் அரசியல் சூழலில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதிக்கு நேர்ந்துள்ள கதி ஆச்சரியம் தரும் ஒன்றல்ல என புதிய ஜனநாயக மார்க்சிஸ லெனினிஸ கட்சி தெரவித்துள்ளது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி அச்சுறுத்தல் மற்றும் நிர்ப்பந்தம் காரணமாக... Read more »

தமிழர் பகுதியில் பற்றி எரியும் வைத்தியசாலை

திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01.10.2023) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காலை ஆறு மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு... Read more »

நீதிபதி சரவணராஜாவை, தான் அச்சுறுத்தவில்லை- சரத் வீரசேகர

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை தான் அச்சுறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை... Read more »

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கரிசனை

நீதிபதி ரி.சரவணராஜா விடயத்தில் முழுமையான உண்மைகள் கண்டறியப்பட வேண்டியுள்ள நிலையில், நாளை காலை 9.30 மணிக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை நேரில் சந்திக்கவுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன அறிவித்துள்ளார். அத்துடன், சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரத்னம் குறித்த விடயம்... Read more »

ஜேர்மன் அரச தலைவர் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜேர்மன் அரச தலைவர் ஓலாப் ஷோல்ஸ் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு பேர்ளினில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இராஜாதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்துள்ளனர். அத்துடன், ஜேர்மன் அரச தலைவர் ஓலாப்... Read more »

தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுமி ஒரு வயதும் 3 மாதமும் நிறைவடைந்த பெண்... Read more »

மக்களின் நம்பிக்கையை இழந்தது நீதித்துறை : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமையால் மக்களின் நம்பிக்கையை நீதித்துறை இழந்துள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ரி.சரவணராஜா தொடர் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து விலகி... Read more »

ஜஸ்வர் உமர் மீண்டும் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக தெரிவு!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான ஜஸ்வர் உமர் மீண்டும் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நேற்று கொழும்பில் நடைபெற்றமு. எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு பணியாற்ற அதிகாரிகளை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றதாக... Read more »

சிறீலங்கன் விமான சேவை இரத்து: ஆராய நடவடிக்கை!

சிறீலங்கன் விமான சேவையின் பயணங்கள் இரத்து செய்யப்படுகின்றமை, தாமதமாகின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது. சிறீலங்கன் விமான நிலைய தொழிற்சங்க உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த சில... Read more »

மின் கட்டண அதிகரிப்பால் உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!

மின்சார கட்டண அதிகரிக்கப்படுகின்றமையின் ஊடாக தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் நிலவுவதாக அதன் தேசிய அமைப்பாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார். ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மின்கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை... Read more »