மட்டக்களப்பு – புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது. மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 222 வது வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை திருத்தல நிருவாகக் குரு அருட்பணி ஜே.எஸ்.மொறாயஸ் அடிகளார் தலைமையில்... Read more »
திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க... Read more »
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். நேற்றிரவு 8 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற காரொன்று கல்லடி சாந்தி படமாளிகைக்கு முன்னால் வேகத்தைக் கட்டுப்படுத்த... Read more »
தமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றது.தற்போதைய சூழ்நிலையிலும் கூட ஜனாதிபதி கோட்டபாய இராணுவத்தினருக்கான எந்தவொரு வளமும் குறைக்கப்பட மாட்டாது என கூறி... Read more »
இலங்கையில் வாழும் ஏழ்மையான 40வீதமான குடும்பங்களின் மாத வருமானம் சராசரியாக ரூ. 26,931 ஆகும். இதனால், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்த குடும்பங்கள் மூன்று வேளை உணவை கற்பனையில்கூட காண முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத்... Read more »
இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை உறுதி செய்யவேண்டும். மீளெழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமைகள்... Read more »
பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. வெகுவிமர்சையாக நடைபெற்ற இந்தத் திருவிழாவில், பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார். இந்நிகழ்வில் மதவேறுபாடுகளை கடந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்... Read more »
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் மென்மையான மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த விடயத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் நாட்டுக்கு வெளிநாட்டு... Read more »
புலம்பெயர் சமூகத்துடன் இலங்கை திறந்த நிலையிலேயே உள்ளது. நாட்டின் ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளையும் பேணுவதில் முன்னேறியுள்ளது. இதேசமயம், அரசியலமைப்புக் கட்டமைப்புக்குள் மாற்றங்களை கூட்டாக ஏற்படுத்த முயல்கிறோம் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதத் திருத்தச் சட்டத்தை திருத்தியுள்ளோம்.... Read more »
ஒரு குடும்பத்தால் கொள்ளையடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். புதிய நவீனத்துவ ஒரு இலங்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட... Read more »