ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஜோர்ஜியா சென்றுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை ஜோர்ஜியாவின் தலைநகர் டிபிலிசியில் நடைபெறவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.... Read more »
போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஆதரித்து... Read more »
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழு மின்சார வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என நிதி தொடர்பான குழு தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை... Read more »
நாட்டிலுள்ள அனைத்து துறைகளிலும் உடலியல் தண்டனைகளை விதிப்பதை தடை செய்வதற்காக தண்டனைச் சட்ட கோவை மற்றும் குற்றவியல் வழக்கு கோவைச் சட்டங்களை திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு உறுப்பு நாடாக கையொப்பமிட்டுள்ள சிறுவர்... Read more »
தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்க தடை விதித்து, உயர் நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமனுவை ஆராய்ந்த பின்னரே உயர்நீதிமன்றம் இந்த இடைக்கால... Read more »
இலங்கைக்கும் கஸகஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கஸகஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் விமான மற்றும் வழிசெலுத்தல் அதிகாரிகளுக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட 13.5.2015 அன்று நடைபெற்ற... Read more »
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் இன்று தீர்மானித்துள்ளனர் குறித்த சிவில் சமூக குழுவின் முழுமையான தீர்மானம் வருமாறு ஜனாதிபதித் தேர்தலில் ஒருபொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் தமிழ்... Read more »
தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நாளையதினம்(01) கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களின் வியாபாரா நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் மே 01ம் திகதி 2024ல் எமது பொதுச் சந்தையிலுள்ள... Read more »
இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சீர்செய்யாதுவிடின், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பமும் இருக்காது என யாழ் பல்கலைக் கழக அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 47ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் ... Read more »