தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று தவறிழைத்துவிட்டது: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா.

அரசியல் நடப்பைப் புரிந்து கொண்டு மக்களுக்கு பயன்தரத்தக்க நிலைப்பாட்டில் தலைமைத்துவம் உறுதியாக நிற்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வரலாற்று தவறிழைத்துவிட்டது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தெரிவு குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு:ரணிலை சந்தித்த சஜித்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, சந்திப்பொன்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நட்பு ரீதியாகவும் நேர்மையாகவும் கருத்துப் பரிமாற்றம் நடந்ததாக அவர் ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு... Read more »

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஐ.நா விசேட நிபுணர் அட்டியா வாரிஸ் கவலை!

இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலை, நாட்டு மக்களின், மனித உரிமை விடயங்கள் மீதும், பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக, வெளிநாட்டு கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் அட்டியா வாரிஸ் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும், நாடுகளின் மீது கடன்... Read more »

இந்தியாவின் பெயரை பாவித்து டளசுக்கு வாக்களிக்க தீர்மானித்தமை கண்டனத்துக்குரியது!மாவை சீற்றம்.

இந்தியாவின் பெயரை பாவித்துதான் டளசுக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்திருந்தால் அது தவறானது கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனா ராஜா தெரிவித்தார். அவரது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். எழுபது... Read more »

தமிழர் தாயகத்திலும் காலி முகத்திடல் வேண்டும் சி.அ.யோதிலிங்கம்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசியத் தேர்தல் மூலம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 134 வாக்குகளும், டளஸ் அழகப்பெருமாவிற்கு 82 வாக்குகளும் அனுரகுமார திசாநாயக்காவிற்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன. ரணில்விக்கிரமசிங்க எஞ்சிய காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பார். இந்தத் தேர்தலில் பலர் விலைபோயுள்ளதாக... Read more »

எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்குமாறு தெரிவித்து A9 வீதியை மறித்து போராட்டம்.

எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்குமாறு தெரிவித்து A9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது கிளிநொச்சி நகரில் உள்ள எரிபொருள் விநியோகத்தை 7 மணியுடன் நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில் மக்கள் வீதியை மறித்து போராட்டம் மேற்கொண்டனர். தீர்வின்றி தொடர்கிறது. Read more »

இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வடமராட்சியில் எரிபொருள் விநியோகம்……!

நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று இறுதி இலக்கங்களின் அடிப்படையில் பெற்றோல் விநியோகம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இறுதி இலக்கங்களான 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கே இவ்வாறு பெற்றோல் விநியோகம் இடம் பெற்று வருகிறது. கரவெட்டி பிரதேச செயலரது பொறுப்பில் நெல்லியடி போலீசார் மற்றும் இராணுவத்தின் ஒழுங்குபடுத்தலில்... Read more »

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, தொலைக்காட்சி வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக... Read more »

வவுனியாவில் பெருந்தொகை பணத்துடன் குடும்பஸ்தர் கைது.

வவுனியாவில் 4 இலட்சம் ரூபாய் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் 4 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இது... Read more »

ஜனாதிபதி தெரிவில் மக்களின் கருத்து புறக்கணிப்பு! ஓமல்பே ​சோபித தேரர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்யப்பட்ட விடயத்தில் பொதுமக்களின் கருத்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கருத்துக்கள் குறித்து கொஞ்சமும் கவனத்திற்கொள்ளவில்லை.... Read more »