அரசின் அடக்குமுறைகளை சிங்கள மக்கள் உணர்கின்றனர்!- சாணக்கியன்

தமிழ் மக்கள் அனுபவித்த அரசின் அடக்குமுறைகளைத் தற்போது சிங்கள மக்களும் உணர்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »

தேர்தல் தான் ஒரே வழி! – சபையில் கஜேந்திரன் தெரிவிப்பு.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் தேர்தலுக்குச் செல்லுங்கள். தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பைக் கொண்டு வாருங்கள். அப்போது நீங்களும் நாங்களும் சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யலாம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் அரசிடம் நேற்று... Read more »

திருகோணமலையில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபருக்கு விளக்கமறியல்.

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபர் ஒருவரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். பேராறு,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில்... Read more »

பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்ட தகவல்.

பொலிஸ் தலைமையகத்திற்கு அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலானமாணவர் ஒன்றியம் மற்றும் கோட்டகோகமவின் செயற்பாட்டாளரான அந்தோனி வெரங்கபுஷ்பிகாகொழும்பு தெற்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து... Read more »

ரணில் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் – வசந்த முதலிகே.

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு விகாரை மகாதேவி பூங்காவில் போராட்டம் நடத்த நாங்கள் தயாராக இல்லை என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். யார் என்ன சொன்னாலும் நாட்டு மக்களுக்கான போராட்டம் காலி முகத்திடலில் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அவசர கடிதம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் சீர்திருத்த கட்சியின் செயலாளர் நாயகம் கென்னத் ஜெயரட்ணம் என்பவரே சிங்கப்பூர் சட்டமா அதிபர் லூசியன் வொங்கிற்கு கடிதம் மூலம் இந்த வேண்டுகோளினை... Read more »

யு.எஸ்.எயிட் தலைமை நிர்வாகி சமந்தா பவர், இலங்கை நிலவரம் தொடர்பில் பேச்சு!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, யு.எஸ்.எயிட் தலைமை நிர்வாகி சமந்தா பவர், இலங்கை நிலவரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சமந்தா பவர், கடந்த 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கையின் நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடி,... Read more »

நுணாவில் IOC யில் தென்மராட்சி மற்றும் கரவெட்டி பிரிவுகளுக்கு இன்று பெற்றோல் விநியோகம்!

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவு மற்றும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவு ஆகியவற்றுக்கு எரிபொருள் நிரப்பு அட்டையின் ஊடாக இன்றைய தினம் நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகிக்கப்படும் என நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர் வை. சிவராசா தெரிவித்தார்.... Read more »

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம்..!

இரு நிபந்தனைகளுடன் 10 தொடக்கம் 26 வருடங்கள் தொடர்ச்சியாக சிறை வாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் எழுத்து மூலமாக கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த கடிதத்தில் தொடர்ச்சியாக 26... Read more »

ஊசிமூலம் போதைப் பாவனை. இதயத்தில் கிருமித் தொற்று! 23 வயது இளைஞன் மரணம்.. |

ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்திவந்த இளைஞன் இதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்.திருநெல்வேலி – பாரதிபுரத்தை சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைஞன் போதைப்பொருளுக்கு... Read more »