மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட மேலும் சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்.

மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கமைய, ஜனாதிபதி செயலாளரின் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள்... Read more »

கட்டாய ஓய்வு வயதுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், ஜனவரி 2023 முதல் அரச துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமைக்கும் சுற்றறிக்கையை வெளியிடவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இடைக்கால... Read more »

22வது திருத்தச்சட்டம் தொடர்பில், ஆளுங்கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடு.

இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 வது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற குழுவுடன் கலந்துரையாடி அது குறித்த ஆராய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் தலைமையில் நேற்று  முன்தினம் இடம்பெற்ற... Read more »

ஏற்றுமதி வருமானம் அதிகரித்து இருந்தாலும் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கவில்லை – இரா.சாணக்கியன் எம்.பி.

ஏற்றுமதி வருமானம் அதிகரித்து இருந்தாலும் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் கதைக்கும்போது ஏற்றுமதி, இறக்குமதி வரியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களினூடாக நாட்டின் பொருளாதரத்தில் மாற்றத்தை... Read more »

பளை மத்திய கல்லூரிக்கு தடைதாண்டலில் தங்கம்!

நடைபெற்றுவரும் வடமாகாண தடகள விளையாட்டுப்போட்டியில் 14வயது ஆண்களுக்கான தடைதாண்டலில் K.தனதீபன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்து பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளர். வழிப்படுத்திய அதிபர்,ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் ஹரிகரன், விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் டிலக்சன் ஆகியோருக்கு பாராட்டுக்கள். இதுவரை எமது கல்லூரிக்கு 2 தங்கப்பதக்கங்களும் , 2 வெள்ளிப்பதக்கங்களும் கிடைத்துள்ளது. Read more »

யாழில்  அட்டைப் பண்ணைகள் அதிகரிப்பதால் மக்கள் கடல் உணவுக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்…! சம்மேளனத் தலைவர் அன்னராசா எச்சரிக்கை.

யாழ்குடா கடலில் அதிகரித்துவரும் கடல் அட்டைப் பண்ணைகளால் சில வருடங்களில் யாழ்ப்பாண மக்கள் தமக்குத் தேவையான கடல் உணவைப் பெற முடியாத திண்டாட்ட நிலைக்கு தள்ளப்படுவார்கள் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை... Read more »

சிவனருள் பவுண்டேஷன் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள இலவச கல்வி நிலையங்களில் சிறுவர் மற்றும் முதியோர் தினமும் நவராத்திரி விழாவும்…!

வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய அதிகஷ்ட பிரதேசங்களில் சிவனருள் பவுண்டேஷன் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள இலவச கல்வி நிலையங்களில் சிறுவர் மற்றும் முதியோர் தினமும் நவராத்திரி விழாவும் மிகச் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களினால் வளர்க்கப்பட வேண்டிய பாரம்பரிய பண்புகளான பெரியோரை கனம் பண்ணுதல்,... Read more »

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம்….!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம்   நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில்  சிவாச்சாரியார் கலாதர்க்குருக்கள் தகமையிலான அர்ச்சகர்களால் கிரியைகள் நடாத்தப்பட்டு வசந்த மண்டப சிறப்பு புசைகள் இடம் பெற்று நாகதம்பிரான் உள் வீதி... Read more »

நாடாளுமன்றத்தில் போதைப்பொருள் பரிசோதனை! சஜித் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். உத்தேச புனர்வாழ்வுப் பணியக சட்டத்தின் அடிப்படையில் சாதாரண மக்களை போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பரிசோதிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார். புனர்வாழ்வு பணியகம் என்ற... Read more »

சீமெந்து விலையில் மாற்றம்! வெளியான தகவல்

INSEE சங்ஸ்தா மற்றும் INSEE ப்ளஸ் 50 கிலோகிராம் சீமெந்து மூட்டைகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. கட்டட நிர்மாணப் பணியாளர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த... Read more »