விருந்துபசாரம் எனும் பெயரில் ஐஸ் போதைப்பொருள் பாவனை – 30 இளைஞர்கள் அதிரடி கைது!

நாட்டில் போதைப்பொருள் பாவனை உச்சமாக அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் என பலரும் குறித்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். இலங்கையில் பல இடங்களில் இது தொடர்பான காவல்துறை சுற்றிவளைப்புக்களும், கைதுகளும் இடம்பெற்றவண்ணம் உள்ளன. அந்தவகையில், விருந்துபசாரம் எனும் பெயரில் ஐஸ்... Read more »

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பிற்கு இழப்பீடு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும் என கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. உரிய நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை... Read more »

பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலை அதிக்கும் வாய்ப்பு!

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ நெல்லின் விலை ஏற்கனவே 115 ரூபாவாக... Read more »

பாடசாலைகளில் களமிறங்கும் புலனாய்வு பிரிவினர்

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து பாடசாலைகள் மற்றும் அருகிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் அடுத்த வாரம்... Read more »

இலங்கையில் ஐஸ் போதைக்கு அடிமையானரின் பரிதாப நிலை

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதால் தேசிய மனநல சுகாதார நிறுவகத்திற்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு சிகிச்சை பெற்று வரும் இரண்டு இளைஞர்கள், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதால் தமது வாழ்வில் ஏற்பட்ட சோகமான நிலைமைகள் குறித்து வெளிப்படுத்தியுள்ளனர். அங்கு ஐஸ்... Read more »

தத்தளித்த கப்பல் தற்போது காங்கேசன்துறை நோக்கி கடற்படை இழுத்துச் செல்கிறது….!

மியன்மாரில் இருந்து இந்தோனேசியா செல்வதற்காக 140 பேருடன் வந்த அகதிகள் கப்பல் வடமராட்சி கிழக்கு உடுத்துறைக்கு கடற்பகுதிலில்  கடற்படையால் இடைமறிக்கப்பட்டு அங்கு விசாரணை நடாத்தப்பட்டு தற்போது கடற்படையின் இரண்டு டோறா படகுகள் அகதிகள் படகிற்கு பாதுகாப்பு வளங்கிய வண்ணம் அதனை கட்டி இழுத்துக்கொண்டு  காங்கேசன்துறை... Read more »

தொடருந்தில் மோதுண்டு விபத்து – இளைஞனும் யுவதியும் பரிதாபமாக உயிரிழப்பு

தெஹிவளை தொடருந்து நிலையத்தில் அருகில் தொடருந்து பாதையை கடக்க முயற்சித்த இளைஞனும் யுவதியும் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் இருந்த மற்றுமொரு இளைஞன் தொடருந்தில் மோதுண்டு காயமடைந்து களுபோலவில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 10 மணியளவில்... Read more »

கிராம உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.... Read more »

போட்டிக்கு பேரூந்துகளை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து!

வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஓர் பேரூந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது. வவுனியா – மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று காலை விபத்து இடம்பெற்றது. வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் வீதியூடாக செட்டிக்குளம் செல்லும் தனியார் பேரூந்தும்... Read more »

நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் வடமராட்சி கிழக்கு கடலில் தத்தளிக்கும் கப்பல், மீட்பு பணிகள் தீவிரம்…..!

சற்று முன்னர் வடமராட்சிக் கிழக்கு  கடலில் கப்பல் ஒன்று பழுதடைந்த நிலையில் அதில் 1நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும், அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், சற்று முன்னர் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற நாட்டைச் சேர்ந்தவர்களே இந்த கப்பலில் தத்தளித்து கொண்டிருப்பதாகவும், இதனை அவதானித்த... Read more »