பாடசாலை அதிபர்கள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை பாடசாலை வளாகங்களில் இருந்து அழிப்பதற்கான வேலைத்திட்டங்களை பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முன்னெடுக்குமாறு நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கையில் நேற்று அறிவுறுத்தியுள்ளது.இந்த வருடம்... Read more »

பருத்தித்துறையில் பரபரப்பு-இருவர் ஸ்தலத்தில் பலி

பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பருத்தித்துறை, முனைப்பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று அதிகாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியில் ஷான் விஜயலால் டி சில்வா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்த ஷான் விஜயலால் டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி இன்று (01) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பலாங்கொடை தொகுதியின் பிரதம அமைப்பாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஷான் விஜயலால்... Read more »

புது வருடப் பிறப்பில் மதுபானம் மற்றும் சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்பட்டது!

வற் வரி திருத்ததிற்கு அமைய மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுபானங்களின் விலையில் இன்று (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின்... Read more »

புது வருடத்தில் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி : அடுத்தடுத்து அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்கள்

உலக வாழ் மக்கள் இன்றையதினம் 2024ஆம் ஆண்டினை மிகவும் மகிழ்ச்சியோடும் பல எதிர்பார்ப்புக்களோடும் வரவேற்றுள்ளனர். உலகம் முழுவதும் இன்றையதினம் புதுவருடக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை வாழ் மக்கள் விலை அதிகரிப்புகளோடு புத்தாண்டை எதிர்கொள்கின்றனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து நாடு... Read more »

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ள போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். மேலும், வற் வரி அதிகரிப்பின் காரணமாக பேக்கரி தொழிற்துறையினரும், பேக்கரி உரிமையாளர்களும் பெரிதும்... Read more »

புத்தாண்டு அரச சேவை உறுதியுரை ஏற்கும் நிகழ்வு யாழ் நீதிமன்றத்தில் இடம் பெற்றது!

புத்தாண்டின் முதல் நாள் அரச அலுவலர்கள் கடமையை ஆரம்பிக்கும் முகமாக மேற்கொள்ளும் அரசசேவை உறுதியுரை நாடுபூராவும் அரச அலுவலகங்களில் இன்று இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் புதிய ஆண்டில்அரச அலுவலர்கள் கடமை ஆரம்பிக்கும் உறுதியுரை நிகழ்வு இடம்பெற்றது குறித்த நிகழ்வில்... Read more »

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை... Read more »

எதிர்வரும் 6 மாதங்களுக்குள் வடக்கில் போதைப்பொருள் ஒழிக்கப்படும்!மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர்

விற்பனையில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்பட்டு, தற்போது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். எதிர்வரும் 6 மாதங்களுக்குள் வடக்கில் போதைப்பொருள் ஒழிக்கப்படும். இவ்வாறு வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் தற்போது மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் மற்றும்... Read more »

எழுகை நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்து புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்…..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். Facebook எழுகைநியூஸ் https://www.facebook.com/profile.php?id=100070800443162&mibextid=ZbWKwL https://youtube.com/@elukainews?si=CxfbNb0okmT7xzMA மலர்ந்திருக்கும் 2024 கிறிஸ்து புத்தாண்டு இலங்கையின் ஆட்சியாளர்களிடம் இனவாதம், மதவாதம், மொழிவாதம், பிரதேச வாதம்  ஒழிந்தும், பெறுமதிசேர் வரிகளும குறைந்து, கடன்... Read more »