களைகட்டும் பொங்கல் வியாபாரம்

தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியது. குறிப்பாக, பொங்கல் பானை வியாபாரிகள் ,வெடி விற்பனையாளர்கள் சந்தையில் குவிந்து வருகின்றன. அதேவேளை யாழின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தைக் கடைகளிலும் இவ்வாறான நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். Read more »

தமிழ்த் தேசியப்  பசுமை இயக்கத்தால் மண்பானைப் பொங்கல் பொதிகள் வழங்கிவைப்பு

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தைப்பொங்கலை  முன்னிட்டு  நாவாந்துறையைச் சேர்ந்த   எழுபது குடும்பங்களுக்குப்  பொங்கல் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைமை  அலுவலகத்தில் அதன் தலைவர் பொ .ஐங்கரநேசன் தலைமையில் நேற்று  வெள்ளிக்கிழமை [12-01-2024] இப்பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.... Read more »

மக்களின் விருப்பங்களே   அபிவிருத்தி திட்டங்களாக அமைய வேண்டும் – அதுவே எனது நிலைப்பாடு –  அமைச்சர் டக்ளஸ்!

மக்களின் விருப்பங்களின் அடிப்படையிலேயே அபிவிருத்தி திட்டங்கள் அமைய வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர்,  மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற திணைக்களங்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான ... Read more »

சில அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகள்

பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது. ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் மொத்த விலை 900 ரூபா. இதன் சில்லறை விலை 1100 – 1300 ரூபாய் ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை... Read more »

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர். மேலும் சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் கைதிகளில் இரண்டு குழுக்களுக்கு இடையில் உணவுப் பிரச்சினை... Read more »

பொலிசாரின் அதிரடி நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் ‘யுக்திய’ பொலிஸ் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 897 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 24 பேர் தடுப்புக் பொலிஸ் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு... Read more »

சுவிட்சர்லாந்து பறந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிடப்படுகின்றது. Read more »

விஜயதாஸ போன்ற இனவாதிகளே இன ஒற்றுமைக்கு  தடையானவர்கள் – சபா குகதாஸ்

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அண்மையில் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பெரும்பாண்மை ஆதரவைப்  பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி தமிழர்களின் சாபக்கேடு என இனவாதத்தை வாரி இறைத்துள்ளார். இதன் மூலம் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச நீதித்துறைக்கு பொருத்தமான அமைச்சரா என்ற கேள்வி எழுந்துள்ளது... Read more »

தொடரும் இந்திய இழுவை படகுகளின் அட்டகாசம்: அறுத்து அழிக்கப்பட்ட பெறுமதியான வலைகள்

யாழ். வடமராட்சி பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவைபடகுகளினால் பெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்கரையை அண்மித்த பகுதியில் இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமாக உள்நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பருத்தித்துறை, இன்பருட்டி, சுப்பர்மடம், சக்கோட்டை கடற்றொழிலாளர்களின்... Read more »

மன்னாரில் சடுதியாக குறைந்துள்ள இறைச்சி கோழி விற்பனை விலை

மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன் மற்றும் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் மன்னார்... Read more »