மன்னம்பிட்டிய பால் தொழிற்ச்சாலை திறப்பு

பால் உற்பத்தியில் தன்னிறைவான நாட்டை உருவாக்கும் நோக்கில் சிறியளவிலான பால் உற்பத்தி மத்திய நிலையங்களை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மனனம்பிட்டிய பால் உற்பத்திச்சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரான்ஸ் அரசின் நிதியுதவியில் இந்த பால் உற்பத்திச்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கென... Read more »

பெற்றோரின் கண்முன்னே பறிபோன 2 வயது குழந்தையின் உயிர்..!

அம்பாறை – பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் 2 வயது குழந்தையொன்று லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் அம்பாறை, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த... Read more »

கஞ்சா கடத்தல்காரர்களின் சொத்து முடக்கப்படும்

கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய வலையமைப்பு காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த வலையமைப்புடன் தொடர்புடையவர்களின் சொத்துக்ககளை முடக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் யுக்திய சுற்றிவளைப்புத் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜயசிங்கவின்... Read more »

எரிபொருள் பாவனை தொடர்பில் வெளியான தகவல்..!

இலங்கையில் எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பாவனை குறைவதற்கு நாட்டின் பொருளாதார நிலைமையும் ஒரு காரணம் என அதன் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அனைத்து எரிபொருட்களும் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதாகவும் ஷெல்டன் பெர்னாண்டோ... Read more »

இலங்கையர்களை பணயக் கைதிகளாக்கிய பாகிஸ்தானியர்கள்..!

பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் அனுப்புவதாக கூறி நான்கு இலங்கையர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 04 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாள குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்... Read more »

கொழும்பில் இருந்து மரண வீட்டிற்கு சென்ற இருவர் உயிரிழப்பு..!

கெபித்திகொல்லேவ – கோலிபெந்த ஏரியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 58 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட... Read more »

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு குறித்து வெளியான அறிவிப்பு..!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரி அறிவிப்பு வெளியிடும் அதிகாரம் இன்றிலிருந்து 100 நாட்களின் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திகதியின் பின்னர் எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான வேட்பு மனுக்களை கோரும் அதிகாரம்... Read more »

கல்வி அதிகாரிகள் மது அருந்தி பொது மலசல கூட்டத்தில் வாந்தி – தகவல் அறியும் சட்டமூலத்தில் அம்பலம்..!!

இரத்மலானையில் உள்ள அரச சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சிலர் மது அருந்திய நிலையில்  பொது மலசல  கூடத்தில் வாந்தி எடுத்தமை தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்  வெளியில் பல தகவல்கள்... Read more »

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கம் -இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம்..!!

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின்  காரணமாக, ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இதனால், இன்று (07) நண்பகல் 12:12 மணியளவில் கடவத்தை, பதுளை, லுணுகலை, கொங்கஸ்பிட்டிய, பக்மிட்டியாவ மற்றும் கொத்மலை ஆகிய... Read more »

அரசாங்க மருத்துவமனைகளில் பிரசவ அறைக்குள் கணவருக்கும் அனுமதி

மகப்பேற்றுக்காக வரும் கர்ப்பிணிகளுடன் அவர்களது கணவன்மாரும் மகப்பேற்று அறைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள மகப்பேற்று மருத்துவமனையின் பணிப்பாளர்   தெரிவித்துள்ளார். மகப்பேற்று அறைக்குள் கர்ப்பிணிப் பெண்களின் கணவன்மாரை அனுமதிக்கும் முதலாவது அரசாங்க மருத்துவமனையாக  காசல் மருத்துவமனை (Castle Hospital) அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.... Read more »