யாழில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த  குருநகர் பகுதியை சேர்ந்த23 வயதுடையசந்தேக நபர் 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த யூன்  மாதம் குருநகர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த... Read more »

உரும்பிராயிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் என்பன களவு!

உரும்பிராயிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் என்பன களவாடப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலுள்ளோர் வெளியேறி மதி யமே வீடு திரும்பியுள்ளனர். இதன்போது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருந்ததை அவதா னித்துள்ளனர். வீட்டினுள் சென்று பார்த்த போது 900 யூரோ காசுத்தாள்கள், ஒன்றரை இலட்சம்... Read more »

அரச பேருந்தில் கஞ்சா கடடத்தியவர் ஆனையிறவில் வைத்து கைது!

யாழில் இருந்து அக்கரைப்பற்று செல்லும் அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில், நேற்றிரவு கஞ்சாவினை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 4 கிலோ 160 கிராம் உள்ளடங்கிய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பேருந்தில் கஞ்சா கடத்துவதாக இராணுவ... Read more »

வேலணை பிரதேச செயலக தொலைபேசிக்கு என்ன நடந்தது? – மக்கள் அந்தரிப்பு!

வேலணை பிரதேச செயலகத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு (+94 21 222 9974)  தொடர்பு கொண்டு அவசர சேவைகளை பெற்றுக் கொள்ளவும், தகவல்களை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. சமூக மட்டங்களில் நடைபெறும் வன்முறைகள் மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத நடவடிக்கைகள் குறித்து செயற்படும் முக்கிய அரச... Read more »

மாணவியை கொடூரமாக தாக்கிய மண்கும்பான் பாடசாலை அதிபருக்கு உளவள சிகிச்சை தேவை – ஊர்காவற்துறை நீதிபதி…!

நிதானமிழந்து 9 வயது மாணவியை தாறுமாறாக தாக்கிவிட்டேன் என, தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட மண்கும்பான் பகுதியிலுள்ள பாடசாலை அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 9 வயது மாணவியை தாறுமாறாக அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட போது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

மரக்கன்றுகளுக்கு தீ வைத்து எரித்த மனிதாபிமானமில்லாத விசமிகள்!

ஏ-9 நெடுஞ்சாலை, ஆனையிறவு பகுதியில் நாட்டப்பட்டிருந்த மரக் கன்றுகளுக்கு விசமிகள் தீ வைத்ததில் அவை தீயில் கருகியுள்ளன. தன்னார்வ அமைப்பொன்றினால் வீதியின் இருமருங்கிலும் நடப்பட்டு பராமரிப்புச் செய்யப்பட்டுவந்த மரக்கன்றுகளில் 28 மரக்கன்றுகளுக்கே இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு தீ வைத்து அழித்துள்ளனர். இயற்கை வளங்கள் அழிவுற்று... Read more »

நெருப்பால் சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுவன்…!

நெருப்பால் சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க் கப்பட்டான்.  யாழ். மாவட்டம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 12 வயதுச் சிறு வன் ஒருவனே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட் டுள்ளான். சிறுவனின் தாயின் கணவர் நெருப்பால் சுட்டதில் சிறுவனுக்குக்... Read more »

நாவாந்துறையில் மோதல் – களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்…!

யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில்பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் மோதலுக்கான காரணம் என்ன என தெரியவரவில்லை.  எனினும் குறித்த பகுதியில்... Read more »

குருந்தூர் மலை அராஜகத்திற்கு எதிராக இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை கடுமையான கண்டனம் 

17 பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட முல்லைத்தீவு ஆதிசிவன் ஆலயத்தில் சைவமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் வழிபாட்டுக்கு தடையேற்படுத்தும் வகையில் கற்பூரத் தீபம் சப்பாத்துக்களால் நசுக்கப்பட்டு, அநாகரிகமான முறையில் பிக்குகள் நடந்துகொண்டமை சைவமக்கள் மீதான அராஜக வெளிப்பாடே இது நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பை சீர்குலைக்கும்,... Read more »

மண்டைதீவில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பதற்கு திகதியிட்டுவிட்டு பதுங்கிக் கொண்டது நில அளவை திணைக்களம்…!

மண்டைதீவு கிழக்கு ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான 4 பரப்பு காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக இன்றையதினம் அளவீடு செய்யப்போவதாக நில அளவை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணியின் உரிமையாளர், பொதுமக்கள், தமிழ் தேசிய... Read more »