போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸார் சேவையிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள் : பதில் பொலிஸ்மா அதிபர்

போதைப் பொருட்களை பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள். பாதாள குழுவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில் பொலிஸ்மா அதிபர்... Read more »

பேருந்து சாரதியின் உணவு பொதியில் போதைப்பொருள்!

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று நேற்று (18) மஹவ பொலிஸாரால் எல்ல பிரதேசத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பேருந்தின் சாரதியின் இருக்கைக்கு அருகில் 30 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 143 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதி... Read more »

ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடாத்த திட்டம்!கிளிநொச்சி இளைஞனுக்கு ஜேர்மனியிலிருந்து வந்த கோடிக்கணக்கான பணம்!

யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், புலிகளை மீளுருவாக்குவதற்காக 11 தடவைகள் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்குகளுக்கு. பல கோடி ரூபா பணத்தை அனுப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும்... Read more »

தென்னிலங்கையில் பரபரப்பு

குருணாகல், நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு கடும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது, ​​பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கி சாரதி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் சாரதி உயிரிழந்துள்ளார்.... Read more »

மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மேலதிகமாக 3 இலட்சம் குடும்பங்களை அஸ்வெசும திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த மேன்முறையீடுகளை பரிசீலித்ததையடுத்து... Read more »

கிளிநொச்சியில் பூசகருக்கு ஏற்பட்ட நிலை

கிளிநொச்சியில் பதினாறு வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பூசகர் ஒருவருக்கு எட்டு வருடங்களுக்கு பின் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பன்னிரெண்டு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கிளிநொச்சி பளைப் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம்... Read more »

கட்டைக்காட்டில் கடற்படை திடீர் சுற்றிவளைப்பு-தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று காலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். கடற்பகுதியை அண்டிய பிரதேசத்தை திடீரென சுற்றிவளைத்த கடற்படை பல மீனவர்களையும்,அவர்களது உடமைகளையும் சோதனை செய்தனர். இதன்போது தடைசெய்யப்பட்ட தங்கூசிவலைகளை வைத்திருந்த மீனவர்களிடம் இருந்து குறித்த வலைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.... Read more »

நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று மழை

இன்று வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் என சிரேஸ்ட வானிலை ஆய்வாளர் கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள்... Read more »

நெடுந்தீவில் கஞ்சாவுடன் சந்தேகபர் ஒருவர் கைது!

நெடுந்தீவு பகுதியில் கஞ்சாவுடன் சந்தேகபர் ஒருவர் கடற்படையினரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து ஒரு கிலோ 50 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள  காணி ஒன்றில் இருந்து 24 ஆயிரம்    போதை   மாத்திரைகளுடன் ஒருவர் கைது.

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள  காணி ஒன்றில் இருந்து இன்று வியாழக்கிழமை (18) ஒரு தொகுதி போதை மாத்திரைகள்  மீட்கப்பட்ட தோடு ,சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தாழ்வுபாடு கடற்படைக்கு... Read more »