கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் ஒப்பந்தத்தின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயது 7 மாத பெண் குழந்தையொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒப்பந்தத்தின் மூலம் நான்கு வயது குழந்தையை வேறு தரப்பினருக்கு வழங்க ஏற்பாடு செய்தமை தொடர்பில் குழந்தையின்... Read more »
கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய வலையமைப்பு காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த வலையமைப்புடன் தொடர்புடையவர்களின் சொத்துக்ககளை முடக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் யுக்திய சுற்றிவளைப்புத் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜயசிங்கவின்... Read more »
பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் அனுப்புவதாக கூறி நான்கு இலங்கையர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 04 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேபாள குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்... Read more »
உடப்புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல – பாஹலகம பகுதியில் வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரினதும், பெண் ஒருவரினதும் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயும் , திருமணமாகாத 39 வயதுடைய ஆணொருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்... Read more »
கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தினசரி உபயோகத்தின் போது பல்வேறு வகையான குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கைத்தொலைபேசிகளுக்கு வரும் சில தனிப்பட்ட குறுஞ்செய்திகளில் சில இணைப்பின் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கான மோசடி நடவடிக்கை இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகளில் வரும்... Read more »
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரழந்துள்ளார். நேற்று முன்தினம் கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வீதி ஊடாக சைக்கிளில் பயணித்த ஒருவர் புதிய செம்மணி வீதி ஊடக கடக்க முற்பட்ட... Read more »
கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னாரில் உள்ள போதை ஒழிப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக குறித்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் வைத்தே சோதனை மேற்கொண்ட... Read more »
மொரகஹகந்த நீர்த்தேக்க வீதியிலிருந்து நாவுல நோக்கி பயணித்த சிறிய லொறி ஒன்று காட்டு யானை மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து மொரகஹகந்த – வதுருமுல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சாரதி... Read more »
பொலன்னறுவையில் புதையல் மூலம் கிடைத்த விலைமதிப்பற்ற தங்கக் காசுகள் எனக் கூறி 40 லட்சம் ரூபாய் பெறுமதியான 810 போலி தங்க நாணயங்களை மனம்பிட்டிய உள்ள நபரொருவருக்கு விற்பனை செய்யச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட... Read more »
வவுனியாவில் மோட்டர் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் இன்று(4) மாலை இடம்பெற்றது. வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக... Read more »