சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலை செய்ய சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாடு சென்ற மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த பெண் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 26... Read more »
இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (11) மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி... Read more »
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நிதியமைச்சர் சுசூகி உள்ளிட்ட ஜப்பான் தூதுக் குழுவினர் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர். இந்த சந்திப்பு சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. Read more »
VAT அதிகரிப்பு காரணமாக அரசாங்கம் மதுபானத்தின் விலையை உயர்த்தியுள்ளதால் சட்டவிரோத மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது. அண்மையில் 1200 – 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சட்டவிரோத சாராயம் – கசிப்பு போத்தல் ஒன்றின் விலை 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் சட்டவிரோத செயற்பாடுகளை... Read more »
ZEE தமிழ் ரி.வி புகழ் செந்தமிழ்க் கலாநிதி பி. சுவாமிநாதன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றுவரும் வாராந்த வெள்ளி நிகழ்வில் காலை 10.00 மணியளவில் கந்தன் மகிமை என்னும் பொருளில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார். Read more »
லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் Twickenham பகுதியில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது... Read more »
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று இடம்பெற்றது.இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா திருப்பலி வருகின்ற 19,20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில்... Read more »
சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை. இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில்... Read more »
செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (11.01) வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ”சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 30 நிமிடங்கள் அமைதியான முறையில் இவ் போராட்டத்தினை... Read more »
பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாகவே மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது. குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில்... Read more »