யாழில் பரபரப்பு-தீக்கிரையான முச்சக்கர வண்டிகள்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இரு குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இரண்டு... Read more »

மக்களே அவதானம்-கொட்டப் போகும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய... Read more »

வத்திராயனில் சாதனையாளர் கெளரவிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பரிதேசத்திற்க்கு உட்பட்ட வத்திராயன் கிராம சேவகர் பிரிவில் சாதனையாளர்கள் கோரவிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 1:30 மணியளவில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சி.சிவகுமார் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விதையிலிருந்து மலர் மாலை... Read more »

கல்லூண்டாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட இருவர் படுகாயம்!

 மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வீதி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கப் ரக வாகனம், கல்லூண்டாய் வைரவர் கோவிலில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது... Read more »

பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் பேராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச பொன்னாவெளி பகுதியை மையமாக கொண்டு சுண்ணாம்புக்கல் அகழ்வதற்கும் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கும்  வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதேச மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அகழ்வுப் பணி நடைபெற்றது பின்னர் வனவளத் திணைக்களம் தலையிட்டு தடுத்து நிறுத்தப்பட்டது... Read more »

ஆளுநருடன் இணைந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை சமர்பிக்குமாறு ஜனாதிபதி வவுனியாவில் தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதி செயலாளர், வட மாகாண பிரதம செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாவட்டங்களினதும் அரசாங்க... Read more »

கட்டைக்காட்டில் பல இடங்களில் டெங்கு பரவும் அபாயம்

வடமராட்சி முள்ளியான் J/433 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பிரதேசத்தில் பல இடங்கள் டெங்கு நோய் பரவும் அபாயத்தில் துப்பரவற்றுக் காணப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாகி பரவி வருவதால் சுகாதாரப் பிரிவினர் சோதனை நடத்தி டெங்கு நோய் பரவக் காரணமானவர்கள் மீது... Read more »

பருத்தித்துறையில் பரபரப்பு-திடீர் சோதனை

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்தித்துறை பகுதியில் பொலிசாரினால் விசேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த தலைமையில் குறித்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று இரவு 07.30 இருந்து 08.30 மணிவரை மோப்ப நாயின் உதவியுடன்... Read more »

போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு விளக்கமறியல்

வவுனியாவில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கி வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று(05) காலை... Read more »

நாளை முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி

நாளை முதல் 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மை நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ள 9 மாவட்டங்களை இலக்கு வைத்து இந்த... Read more »